Saturday 18th of May 2024 10:29:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதியானது: இலங்கையில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு!

நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதியானது: இலங்கையில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு!


நாடு திரும்பியவர்களில் மேலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்றுமுன்னதாக தெரிவித்துள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் ஆறு பேருக்கும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் என ஏழு பேருக்கு சற்று முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மேலும் 20 பேர் வெளியேறியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 230 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 129 ஆக உள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE